close
Choose your channels

ஓபிஎஸ் அணிக்கு தாவுகிறாரா சி.ஆர்.சரஸ்வதி?

Monday, April 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது முதல், அவர் மறைந்த பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு வரை அடிக்கடி சமூக வலைத்தள பயனாளிகளிடம் சிக்கி சின்னாபின்னாமானவர்களில் ஒருவர் சி.ஆர்.சரஸ்வதி. சமீபத்தில் கூட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இவர் பிரச்சாரம் செய்ய சென்றபோது அந்த பகுதி மக்கள் அழுகிய தக்காளியால் இவரை தாக்கியதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் அணியின் கை ஓங்கி வருவதாக கூறப்படுகிறது. சசிகலா ஏற்கனவே சிறையில் உள்ள நிலையில் தற்போது டிடிவி தினகரனும் கைது செய்யப்பட வாய்ப்பு அதிகம் இருப்பதால், சி.ஆர்.சரஸ்வதி தற்போது ஓபிஎஸ் அணியில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர் மட்டுமின்றி தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் பா வளர்மதியும் ஓபிஎஸ் அணியில் சேரவுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இரண்டாக பிளவுபட்ட அதிமுகவே இணையவுள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓபிஎஸ் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ள நிலையில் சி.ஆர்.சரஸ்வதியும், வளர்மதியும் முந்திக்கொண்டு ஓபிஎஸ் அணியில் இணையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.