close
Choose your channels

ஜெயலலிதாவின் 'போயஸ் கார்டன்' தற்போதைய நிலை.

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது 'போயஸ் கார்டன்' என்றாலே ஒரு தனி மதிப்பும் மரியாதையும் இருக்கும். போயஸ் கார்டனுக்குள் குறிப்பாக ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா இல்லம்' பகுதியில் யாரும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாது. ஏகப்பட்ட கெடுபிடிகள், போலீஸ் பாதுகாப்பு என பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.
1967ஆம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் அவரது தாயார் சந்தியா ஆகியோரால் கட்டப்பட்டா இந்த இல்லம் சுமார் 24,000 சதுரடி பரப்பளவை கொண்டது. இந்த வீட்டின் மதிப்பு ரூ.44 கோடி என கடந்த சட்டசபை தேர்தலின் போது ஜெயலலிதா தனது வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா, இளவரசி ஆகியோர் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். ஆனால் இருவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் போயஸ் கார்டன் இல்லம் தற்போது யார் வசமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் 'அம்மா நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் சில நாட்களுக்கு முன் அறிவித்து அதற்காக ஒரு கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கினார்.
இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் போயஸ் கார்டன் இல்லம் தற்போது வெறிச்சோடி உள்ளது. இந்த இல்லத்திற்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதோடு, தற்போது எந்தவித கெடுபிடிகளும் இல்லை. ஒரு தலைவர் வாழ்ந்த வீடு என்பதற்கு எந்தவித அடையாளமும் இல்லாமல் இருக்கும் இந்த இல்லம் ஓபிஎஸ் அவர்களின் முயற்சியால் நினைவு இல்லமாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.