close
Choose your channels

கமல் ரசிகர்களால் வெளிச்சத்துக்கு வந்த முட்டை ஊழல்! ஆட்டம் ஸ்டார்ட் ஆயிருச்சு

Tuesday, August 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழக அரசு மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். அதுமட்டுமின்றி தனது துறையின் ஊழல் ஒன்றை தெரிவித்ததோடு ரசிகர்களையும் பொதுமக்களையும் ஊழல் குறித்த புகார்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

கமல்ஹாசனின் இந்த கோரிக்கையை அடுத்து ஏராளமான ஊழல் புகார்கள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டைகள் வழங்கியதை கமல் நற்பணி மன்றத்தினர் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார். கமல் ரசிகர்கள் முதல்முறையாக ஒரு ஊழலை கையும் களவுமாக பிடித்துள்ளதாகவும், இது ஆரம்பம்தான் என்றும் போக போக அனைத்து துறை ஊழல்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம் என்றும் ஊழலுக்கு எதிரான எங்கள் ஆட்டம் ஸ்டார்ட் ஆயிருச்சு என்றும் கமல் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.