close
Choose your channels

தீபா வேட்புமனு தள்ளுபடியா?

Friday, March 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தீபா நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். தீபா அரசியலுக்கு அடியெத்து வைக்க முடிவு செய்த நாளில் இருந்து அருகில் இருந்த அவரது கணவர் மாதவன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யும் முக்கிய நிகழ்ச்சியில் உடனில்லை என்பது கவனிக்கத்தக்கது. எனவே தீபா போட்டியிடுவதை அவரது கணவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தீபாவின் வேட்புமனுவில் கணவர் மாதவன் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும், கணவரின் சொத்து விபரங்களும் குறிப்பிடப்படவில்லை என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கணவரின் பெயர், மற்றும் கணவரின் சொத்து மதிப்பு குறிப்பிடாததை தீபா வேண்டுமென்றே செய்திருக்க வேண்டும் என்றும் இவை இரண்டு கவனிக்காமல் விட்டுவிட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிடிவி தினகரன், மதுசூதனன், மற்றும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோர் பலம் பொருந்திய வேட்பாளராக இருக்கும் நிலையில் தன்னால் வெற்றி பெற முடியாது என்பதால் வேட்புமனுவை வேண்டுமென்றே குளறுபடியான தகவல்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று தீபா முடிவு செய்திருப்பதாகவும், அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் கொள்கின்றனர். அவர்களுடைய சந்தேகம் உண்மையா? என்பது போகப்போகத்தான் தெரியும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.