close
Choose your channels

ஒரே மாதத்தில் உடைந்தது தீபா கட்சி. தனிக்கட்சி ஆரம்பிக்கின்றார் கணவர்

Saturday, March 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சமீபத்தில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். இந்த பேரவையின் சார்பில் அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தீபாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்திய மாதவன், தீபாவின் பேரவையில் தீய சக்திகள் இருப்பதாகவும், அதனால் அந்த பேரவையில் இருந்து தான் விலகியதாகாவும் கூறினார்

மேலும் தீபா ஆரம்பித்தது கட்சி இல்லை என்றும், அது ஒரு பேரவைதான் என்றும், தான் விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், இக்கட்சியின் சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து தொண்டர்களிடம்(!) கலந்து ஆலோசித்து முடிவு செய்ய உள்ளதாகவும் கூறினார்

தீபாவின் கட்சியை உடைக்க டிடிவி தினகரனிடம் மாதவன் பணம் பெற்றுள்ளதாக தீபாவின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.