close
Choose your channels

ராம்ரஹிம் சிங் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்: திடுக்கிடும் தகவல்

Wednesday, September 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலியல் வழக்கில் தேரா ஷச்சா ஆசிரமத்தின் சாமியார் ராம் ரஹிம் சிங் 30 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது ஆசிரமத்தை கடந்த சில நாட்களாக போலீஸ் குழு ஒன்று ஆய்வு செய்து வந்தது.

இந்த நிலையில் அந்த ஆசிரமத்தின் ஒரு பகுதியில் சுமார் 600 எலும்புக்கூடுகள் எரிக்கப்பட்ட நிலையில் இருந்ததை இந்த குழு கண்டுபிடித்துள்ளது. எரிக்கப்பட்ட அனைவரும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியிருக்கலாம் அல்லது மோட்சம் அளிப்பதாக கூறி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த 600 எலும்புக்கூடுகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.