ஆளுனர் மாளிகையில் டிஜிபி அவசர ஆலோசனை
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் தற்போது இருக்கும் கவர்னர் வித்யாசாகர் ராவ், தற்போதைய அரசியல் சிக்கலை தீர்க்க சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
முதல்வர் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகிய இருவரையும் நேற்று தனித்தனியே சந்தித்த ஆளுனர் இன்று தனது முடிவை அறிவிக்க உள்ளார். முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருவாரா? அல்லது சசிகலாவை முதல்வர் பதவியேற்க அனுமதிப்பாரா? என்ற கேள்விகள் தமிழக மக்களிடம் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் டிஜிபி ராஜேந்திரன் அவர்கள் சற்று முன் ஆளுனர் மாளிகைக்கு சென்று ஆளுடனரிடம் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆளுநரிடம் டி.கே.ராஜேந்திரன் விளக்கம் அளித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்தும் ஆளுநர் டிஜிபியிடம் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.