close
Choose your channels

பிரபல எழுத்தாளருடன் தனுஷ்-செளந்தர்யா ரஜினி சந்திப்பு

Saturday, April 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான 'பாட்ஷா' உள்பட ஒருசில படங்களுக்கு வசனம் எழுதியவர் எழுத்தாளர் பாலகுமாரன். இவர் 'இது நம்ம ஆளு' என்ற பாக்யராஜ் படத்தையும் இயக்கியுள்ளார். தமிழ் எழுத்துலகில் இவரது எழுத்துக்கு மயங்காத தமிழர்களே எனலாம். எழுத்தாளர் பாலகுமாரன் தற்போது ராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதையாக எழுதி வருகிறார். இந்த படத்தை விஷ்ணுவர்னன் இயக்கத்தில் அஜித் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் எழுத்தாளர் பாலகுமாரனை அவரது வீட்டில் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 161' திரைப்படம் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. எனவே 'பாட்ஷா' படம் போலவே 'தலைவர் 161' படத்திற்கும் பாலகுமாரன் வசனம் எழுதுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.