close
Choose your channels

பாகிஸ்தானை பந்தாடிய போட்டியில் கிரிக்கெட் கடவுளை சந்தித்த தனுஷ்

Monday, June 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பரம வைரியான பாகிஸ்தானுடன் இந்திய அணி 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்போதுதான் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனவே இந்த போட்டியை நேரில் பார்க்க கோலிவுட் திரையுலகினர் பலர் சென்றிருந்தனர். அவர்களில் ஒருவர் தனுஷ்

இந்த போட்டியில் வழக்கம் போல பாகிஸ்தான் அணியை பிரித்து மேய்ந்து பந்தாடிய இந்திய அணி, 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நேரில் கண்டு ரசித்த சச்சின் தெண்டுல்கர் உள்பட பலரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் போட்டியின் நடுவே சச்சினை சந்தித்த தனுஷ் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த தனுஷ், இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்த மைதானத்தில் கிரிக்கெட் கடவுள் சச்சின் அவர்களை நேரில் சந்தித்தேன். சந்தோஷத்தில் என்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.