close
Choose your channels

இயக்குனர் செய்யாறு ரவி காலமானார்

Saturday, March 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபு நடித்த 'தர்மசீலன்', கார்த்திக் நடித்த 'ஹரிச்சந்திரா' ஆகிய படங்களின் இயக்குனர் செய்யார் ரவி காலமானார். இயக்குனர் செய்யாறு ரவிக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவரது உயிர் பிரிந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
செய்யாறு ரவி திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களும் இயக்கி வந்தார். இவர் இயக்கி வரும் 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' தொடர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரின் படப்பிடிப்பில் இருந்தபோதுதான் மாரடைப்பு ஏற்பட்டு செய்யாறு ரவி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' படத்தை சிங்கள மொழியில் இயக்கியவர் செய்யாறு ரவி என்பது குறிப்பிடத்தக்கது.
செய்யாறு ரவி அவர்களின் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.