close
Choose your channels

நான் அப்பாவி, அதனால் எனக்கு பயமில்லை: கைதான திலீப் பேட்டி

Tuesday, July 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்குள்ளான வழக்கில் நேற்று அதிரடியாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பலகட்ட விசாரணைக்கு பின்னர் நேற்று மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட திலீப் கைது செய்யப்பட்டு அலுவா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறைக்கு செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய திலீப், "நான் எந்த குற்றமும் செய்யாததால் எனக்கு எவ்வித பயமும் இல்லை. நான் அப்பாவி என்பதை சட்டத்தின் முன் நிரூபிப்பேன்" என்று கூறினார்.
இந்த நிலையில் கேரள போலீஸ் இயக்குனர் லோக்நாத் பெஹரா அவர்கள் திலீப் கைது குறித்து கூறியபோது, 'நடிகை பாவனா பாலியல் பலாத்கார வழக்கில் சதி செய்ததற்கான ஆதாரங்களை சேகரித்த பின்னரே திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்' என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் திலீப்புக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும், இதனையடுத்து நாளை அவருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய திலீப் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.