close
Choose your channels

ப்ளஸ் 2 தேர்வில் அட்லி பாஸ் ஆவாரா?

Sunday, April 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று முன் தினம் நிறைவடைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தேர்வை ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதியுள்ள நிலையில் 'தெறி' இயக்குனர் அட்லியும் ப்ளஸ் 2 தேர்வை எழுதியுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
'எனது முதல் படமான 'ராஜா ராணி' படத்தை முடித்தவுடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய உணர்வில் இருந்ததாகவும், தற்போது 'தெறி' படத்தை முடித்தவுடன் ப்ளஸ் 2 தேர்வை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் மாணவனைப் போல் இருப்பதாகவும் அட்லி தனது பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் தன்னால் முடிந்தவரை இந்த படத்திற்கு பெஸ்ட் உழைப்பை கொடுத்துள்ளதாகவும், இனி ரசிகர்கள்தான் இந்த படத்திற்கான தீர்ப்பை தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படத்திற்காக அட்லிக்கு 100க்கு 100 மார்க் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.