close
Choose your channels

'மாரி 2' படம் குறித்த முக்கிய அறிவிப்பு. பாலாஜி மோகன்

Saturday, June 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படம் 'மாரி'. அனிருத்தின் அட்டகாசமான இசையில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் தொடங்கவிருப்பதாக இயக்குனர் பாலாஜி மோகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறியதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைத்தளத்தில் 'மாரி 2' படம் குறித்த ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். 'இன்று எனது வாழ்வில் ஒரு மிகப்பெரிய நாள். இன்று மாலை 'மாரி 2' படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவரவுள்ளது. இந்த படத்திற்காக நான் கடந்த சில மாதங்களாக திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று மாலை இந்த படம் குறித்த முக்கிய தகவல் வெளிவரவுள்ளது' என்று கூறியுள்ளார். எனவே தனுஷ் ரசிகர்களுக்கு இன்று மாலை குஷியான அறிவிப்பு வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'மாரி' படத்திற்கு பின்னர் தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைக்கவில்லை. இருப்பினும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க வேண்டும் என்று பாலாஜி மோகனின் சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரசிகர்களின் வேண்டுகோளை பாலாஜி மோகனும் தனுஷும் ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.