close
Choose your channels

இந்தியாவில் இருந்து சட்டரீதியாக பிரிய தயார். இயக்குனர் கெளதமன்

Thursday, April 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இயக்குனர் கெளதமன் தலைமையில் சுமார் 50 இளைஞர்கள் பூட்டு போட்டனர். இதனால் சென்னையின் போக்குவரத்தே ஸ்தம்பித்த நிலையில் இயக்குனர் கெளதமனை கைது செய்த போலீசார் பூட்டை உடைத்து போக்குவரத்தை சரிசெய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவுடன் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கெளதமன், 'அன்று மகாத்மா காந்தி அரை நிர்வாணமாக போராடி சுதந்திரம் பெற்று தந்தார். அதே முறையை எங்கள் விவசாயிகள் கையாண்டனர். முழு நிர்வாணத்திலும் போராடி பார்த்துவிட்டனர். ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
எங்கள் விவசாயிகளையும் விவசாயத்தை அழித்துவிட்டு ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே மோடி அழிக்க நினைக்கின்றார். ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்தல், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்தல், மீனவர்கள் பிரச்சினை தீர்க்க பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல், கச்சத்தீவை மீட்டுதல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேறும் வரை போராடுவோம். இந்த போராட்டத்தில் நாங்கள் செத்தாலும் பராவாயில்லை, போராட்டத்தை கைவிட மாட்டோம்
தமிழர்களுடைய உரிமையை பறிக்க நினைத்தால் இந்தியாவில் இருந்து சட்டப்படி பிரியவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்' என்று இயக்குனர் கெளதமன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.