close
Choose your channels

குழந்தை பெற்று கொள்ள பயமாக இருக்கின்றது. பிரதமரிடம் பிரபல நடிகை கூறியது ஏன்?

Saturday, August 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா திரிபதி என்பவர் தனது டுவிட்டரில் பிரதமர் மோடியின் டுவிட்டர் அக்கவுண்டை டேக் செய்து, 'நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதால் எனக்கு பெண் குழந்தைகள் பெற்று கொள்ள பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரது கருத்து கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இந்தியா முழுவதும் சுதந்திர தினம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சண்டிகாரில் பள்ளியில் சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த ஒரு சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் நாடு முழுவதையும் அதிர்க்குள்ளாக்கியுள்ள நிலையில் நடிகை திவ்யங்கா திரிபதி தனது டுவிட்டரில், 'சாலையில் உள்ள குப்பைகளை மட்டும் பிரதமர் சுத்தம் செய்தால் போதாது, பெண்களை பாலியல் வன்கொடுகமைகளுக்கு உள்ளாக்கும் ஆண்களையும் அவர் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் மகள்கள் தினம் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பிய அவர், மகள்களை பாதுகாக்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்களால் பெண் குழந்தைகளை பெற்று கொள்ளவே பயமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.