close
Choose your channels

திமுக எம்.எல்.ஏக்கள் திடீர் கைது! அரசு விழாவில் பங்கேற விடாமல் செய்த போலீசார்

Friday, June 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட விழாவில் பங்கேற்க முயன்ற திமுக எம்.எல்.ஏக்களை கைது செய்து அந்த விழாவில் பங்கேற்க விடாமல் செய்த புதுக்கோட்டை போலீசாரின் நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
புதுக்கோட்டையில் இன்று ரூ.232 கோடி செலவில் கட்டப்பட்ட, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடத் திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
இந்த விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் என்ற முறையில் தி.மு.க எம்எல்ஏ-க்களான பெரியண்ணன் அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகியோருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டு, விழாவுக்கான விளம்பரங்களிலும் இவர்களின் பெயர் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில் மூன்று எம்.எல்.ஏக்களும் இந்த விழாவில் கலந்து கொள்ள கிளம்பியபோது காவல்துறை அதிகாரிகள் அவர்களை அதிரடியாக கைது செய்தனர். விழாவில் பங்கேற்குமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தங்களைப் போனில் அழைத்ததாக மூவரும் கூறியும் போலீசார் கைது செய்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.