close
Choose your channels

நெடுவாசல் போராட்ட மாணவர் குபேரன் ஜாமீனில் விடுதலை

Wednesday, July 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டத்திற்கான மாணவர் குபேரன் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
கதிராமங்கலம் பிரச்சனை தொடர்பாகவும், மீத்தேன் திட்டத்தை கைவிட கோரியும் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு குபேரன் தனது பேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்ததே அவர் கைது செய்யப்பட்டதற்கு காரணமாக கூறப்பட்டது.
இந்த நிலையில் குபேரன் சற்று முன்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சிதம்பரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.