close
Choose your channels

கமல்ஹாசனிடம் ரூ.100 கோடி கேட்டு வழக்கு: அரசியல் கட்சி தலைவர் அறிவிப்பு

Tuesday, July 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், சர்ச்சைக்குரிய வார்த்தை ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் இன்னொரு நடிகையை பார்த்து கூறினார். இந்த வார்த்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிடுவதாக ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிருஷ்ணசாமி, 'ஒரு நடிகை இன்னொரு நடிகையை பார்த்து கூறிய அந்த சர்ச்சைக்குரிய வார்த்தை ஒரு சமுதாயத்தையே ஒட்டுமொத்தமாக அவமதிக்கும் செயல். இந்த செயலுக்கு அந்த நடிகையும் நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசனும், அந்த டிவியும் மன்னிப்பு கேட்க இரண்டு நாட்கள் கால அவகாசம் கொடுத்திருந்தேன்.

ஆனால் இதுவரை அவர்கள் மன்னிப்பு கேட்காததால் கமல்ஹாசன் மீது ரூ.100 கோடி கேட்டு வழக்கு தொடர உள்ளேன்' என்று கூறியுள்ளார். இதே கிருஷ்ணசாமிதான் கமல்ஹாசன் 'சண்டியன்' என்று ஒரு படத்திற்கு தலைப்பு வைத்தபோது கண்டனம் தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.