close
Choose your channels

தெலுங்கில் டப் ஆகும் துல்கார் சல்மான்-நித்யா மேனன் படம்

Friday, July 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ஓகே கண்மணி' திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த வெற்றியை அடுத்து இளைஞர்களின் கனவு காதலர்களாக துல்கார் சல்மான் - நித்யாமேனன் ஜோடி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஓகே கண்மணி' படம் வெளிவந்து சில மாதங்கள் ஆகிய பின்னரும் இன்னும் இந்த ஜோடி குறித்து கல்லூரி இளைஞர்களிடம் பேச்சு அடிபடுவதை கண்ட தெலுங்கு திரையுலகினர், இதே ஜோடி நடித்த மற்றொரு வெற்றி படமான 'உஸ்தாத் ஓட்டல்' படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. துல்கார் சல்மான், திலகன், நித்யாமேனன், சித்திக் மற்றும் பலர் நடித்திருந்த இந்த படத்தை அன்வர் ரஷீத் இயக்கியிருந்தார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருப்பதாகவும், விரைவில் இந்த படம் தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.