close
Choose your channels

'ஓகே கண்மணி' நாயகனின் அடுத்த தமிழ்ப்படம் குறித்த தகவல்

Tuesday, June 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படத்தின் நாயகன் துல்கார் சல்மான் தற்போது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் 'சாவித்ரி' வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெமினிகணேசன் கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கவுள்ள படத்தில் துல்கார் சல்மான் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் பணிபுரியவுள்ளதாகவும் இந்த படத்திற்கு தீனதயாள் என்பவர் இசையமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவல்களை இயக்குனர் கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். மிகவிரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.