close
Choose your channels

சனிக்கிழமை கூடுகிறது சட்டமன்றம். பெரும்பான்மை கிடைக்குமா?

Thursday, February 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வராக இன்று மாலை பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 15 நாள் அவகாசம் கவர்னர் கொடுத்திருந்த போதிலும் வரும் சனிக்கிழமையே சட்டமன்றத்தை அவர் கூட்டி நம்பிக்கை வாக்கு கோரப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கூவத்தூரில் கடந்த பத்து நாட்களாக தங்கியிருப்பதால் அவர்களுடைய தொகுதி பணிகள் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் மக்கள் அதிருப்தியில் இருப்பதால் இன்னும் 15 நாட்களுக்கு அவர்களை அங்கு தங்க வைத்தால் அதுவே சிக்கல்களுக்கு காரணமாகிவிடும் என்பதால் உடனடியாக அவர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

124 எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் இருப்பதாக முதல்வர் தரப்பில் கூறினாலும் உண்மையில் எத்தனை பேர் உள்ளனர் என்ற எண்ணிக்கை ஊடகங்கள் உள்பட வெளியாட்களுக்கு தெரியவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களுக்கு சனிக்கிழமை இறுதித்தீர்வு ஏற்படுமா? அல்லது தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.