close
Choose your channels

மெர்சலின் மெலடி பாடல் பல வருடங்களுக்கு பேசப்படும்: எடிட்டர் ரூபன்

Tuesday, August 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் குறித்து பல ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் முதல்முறையாக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்காக கம்போஸ் செய்துள்ள பாடல்கள் குறித்த தகவல் ஒன்றை இந்த படத்தின் எடிட்டர் ரூபன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்துள்ள மெர்சல் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக இருப்பதாகவும், குறிப்பாக ஒரு மெலடி பாடல் பல வருடங்களுக்கு பேசப்படும் ஒரு பாடலாக இருக்கும் என்றும் எடிட்டர் ரூபன் நமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த பாடல் தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த பாடல் நீண்ட நாட்களுக்கு பின் கேட்ட ஒரு திருப்தியான மெலடி பாடலாக தனக்கு இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த படத்தின் பாடல் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் ரூபன் தெரிவித்த அந்த மெலடி பாடலை கேட்க இன்னும் 20 நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ரஹ்மான் பாடல்கள் என்றாலே மெர்சலாக இருக்கும் நிலையில், தளபதியின் 'மெர்சல்' படத்திற்காக அவர் கம்போஸ் செய்த பாடலை கேட்க லட்சக்கணக்கான அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளன்ர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.