close
Choose your channels

சகோதரியை விட மிகப்பெரிய பரிசு இந்த உலகில் இல்லை. ஃபேஸ்புக் நிறுவனர் உருக்கம்

Friday, March 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை உலகின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்று கூறுவதுண்டு. உலகில் இன்று ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்கள் மிகவும் குறைவு. அரசியல், சினிமா முதல் அடிப்படை விஷயங்கள் வரை எதுவேண்டுமானாலும் ஃபேஸ்புக்கில் தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட பெருமை கொண்ட பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் அவர்களுக்கு மிக விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது. இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மிக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்
எனது மனைவி பிரிசில்லா மீண்டும் கர்ப்பமாகியுள்ளதை தெரிந்தவுடன் அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் இருவரும் விரும்பினோம். இந்த குழந்தையும் பெண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த உலகில் சகோதரியைவிட மிகப்பெரிய பரிசு வேறு ஒன்றும் இல்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன். மூத்த மகளும் பிறக்க போகும் மகளும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்
என்னுடைய மூன்று சகோதரிகள் தான் எனக்கு புத்திசாலித்தனத்தையும், வலிமையையும் கற்று கொடுத்தனர். அவர்கள் எனக்கு சகோதரியாக மட்டுமின்றி மிகச்சிறந்த நண்பர்களாகவும் இருந்தனர். என்னுடைய மனைவி பிரிசில்லாவும் இரண்டு சகோதரிகளுடன் வளர்ந்து கடின உழைப்பு மற்றும் பிறர் மீது அன்பு செலுத்துதல் ஆகியவற்றை கற்றுக்கொண்டுள்ளார். நம்மை சுற்றி அம்மா, சகோதரி, தோழி ஆகியோர்கள் இருப்பதால்தான் நாம் வலிமையாக இருக்கின்றோம். அதுபோலவே எங்களுக்கு பிறக்கபோகும் செல்ல குழந்தையும் தனது சகோதரியுடன் வலிமையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்' என்று மார்க் உருக்கத்துடன் பதிவு செய்துள்ளார்.
மார்க்-பிரிசில்லா தம்பதிகளுக்கு ஏற்கனவே ஏற்கனவே 15 மாத பெண் குழந்தை இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.