close
Choose your channels

இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம்: 2 மில்லியன் டாலருக்கு வழக்குப்பதிவு

Tuesday, June 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கலிபோர்னியாவை சேர்ந்த 81 வயது நபர் ஒருவரின் 57 வயது மகன் இறந்து, புதைத்த பின்னர் உயிருடன் வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கலிபோர்னியா போலீசார் சமீபத்தில் ஒரு பிணத்தை கண்டறிந்து அந்த பிணத்தில் இருந்த ஆதாரங்களை வைத்து 81 வயது ஃபிராங்க் கெரிகன் என்பவரது மகன் தான் இறந்தவர் என்று முடிவு செய்தனர்.

இறந்த உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டிருந்ததால் அவரது உடலை ஃபிராங்க் குடும்பத்தினர் அடையாளம் காணமுடியவில்லை. இருப்பினும் போலீசார் கொடுத்த ஆதாரங்கள் சாதகமாக இருந்ததால் பிணத்தை பெற்று இறுதி சடங்கு செய்தனர்.

இந்த நிலையில் இறந்ததாக கருதப்பட்ட ஃபிராங்க் கெரிகன் மகனை அவருடைய நண்பர் நேரில் பார்த்து, அவர் உயிருடன் இருப்பதாக தகவல் கொடுத்ததோடு, அவரை வீட்டிற்கும் அழைத்து வந்தார். அதன்பின்னர் தான் போலீசார் தவறுதலாக யாரோ ஒருவர் இறந்ததை தனது மகன் இறந்ததாக தவறாக கூறியது தெரியவந்தது. இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தங்களுக்கு நேர்ந்த மன உளைச்சலுக்கு 2 மில்லியன் டாலர் கேட்டு போலீசார் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இந்த சம்பவம் கலிபோர்னியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.