close
Choose your channels

ஐதராபாத் மருத்துவமனையில் த்ரிஷா அனுமதியா? தாயார் உமாகிருஷ்ணன் விளக்கம்

Thursday, March 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை த்ரிஷா, தற்போது கூட இளம் நடிகைகளுக்கு போட்டியாளராக உள்ளார். இவர் தற்போது 'மோகினி', 'சதுரங்க வேட்டை 2', 'கர்ஜனை', '1818', '96' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் உணவு ஒவ்வாமை காரணமாக த்ரிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமுக வலைத்தளங்களில் மிக வேகமாக ஒரு செய்தி பரவி வந்தது. இதுகுறித்து ஒருசில இணையதளங்கள் செய்தியும் வெளீட்டுள்ளன.

இந்நிலையில் இந்த செய்தியை மறுத்து நடிகை த்ரிஷாவின் தாயார் உமாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். 'மலேஷியாவில் சதுரங்கவேட்டை-2 படத்தின் படப்பிடிப்பில், அரவிந்தசாமியுடன், த்ரிஷா நடித்து வருவதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வந்த தகவல் முற்றிலும் வதந்தி என்றும் இதை யாரும் நம்ப வேண்டாம்' என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். உமாகிருஷ்ணனின் இந்த விளக்கத்தை தொடர்ந்து த்ரிஷா குறித்த வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.