close
Choose your channels

சென்னை சில்க்ஸ்-ஐ அடுத்து மேலும் ஒரு வணிக வளாகத்தில் தீ விபத்து

Sunday, June 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 31ஆம் தேதி சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் ஏழுமாடி கட்டிடத்தில் திவிபத்து ஏற்பட்டு அந்த கட்டிடம் முழுவதும் எரிந்து சிதிலமடைந்துவிட்டது. தற்போது மீதியுள்ள கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டிடம் எரிந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் சென்னை மக்களும் வியாபாரிகளும் மீண்டு வராத நிலையில் சென்னையின் இன்னொரு முக்கிய பகுதியான புரசைவாக்கம் பிரதான சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று மாலை தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

கீழ்தளத்துடன் சேர்த்து 4 தளங்களை கொண்ட இந்த வணிக வளாகத்தில் 35-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் உள்ள துணிக்கடை ஒன்றில் நேற்று ஏ.சி. மிஷினில் ஏற்பட்ட மின்சாரக்கசிவு காரணமாக தீப்பற்றியது. இதனால் அந்த வணிக வளாகத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென நான்கு கடைகளுக்கு பரவிவிட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் ஒருசில மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்தினர். இந்த கட்டிடத்திலும் எந்த விதமான தீத்தடுப்பு வசதிகளும் செய்யப்படவில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை நகரில் அடுத்தடுத்து தீ விபத்துக்கள் நேரிட்டு வருவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் அச்சமடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.