close
Choose your channels

சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது. ஓபிஎஸ் திட்டவட்டம்

Tuesday, April 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று மாலை முதல் இரண்டாக பிரிந்திருக்கும் அதிமுக மீண்டும் ஒன்றிணையவுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை ஓபிஎஸ் அணியினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் ஜெயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

மேலும் ஓபிஎஸ் அணி தரப்பிலும் அதிமுகவை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பச்சைக்கொடி காட்டப்பட்டது. இந்நிலையில் சற்றுமுன் திடீரென இணைப்பிற்கு ஓபிஎஸ் ஒருசில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

எந்த ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலும் அதிமுக சென்று விடக்கூடாது என்றும் சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிவிசாரணை நடைபெறும் என்ற எங்களின் அடிப்படை கொள்கையை மாற்ற மாட்டோம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் அவர்களின் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அதிமுக அம்மா அணியினர் பேச்சுவார்த்தைக்கு முன்வருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.