close
Choose your channels

ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்த முக்கிய கட்சியின் தலைவர்

Thursday, April 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டு கொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு அதிமுக தொண்டர்களின் அமோக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆர்.கே. நகர் தேர்தலுக்கு பின்னர் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் பலர் ஓபிஎஸ் அணியின் பக்கம் திரும்ப வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்னொரு அரசியல் கட்சி தலைவர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் என்பது குறிப்பிடத்தக்கது. இதுநாள் வரை அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு கொடுத்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் ஒன்றான தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ளது ஓபிஎஸ் அணியினர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது.

சற்று முன்னர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் இல்லத்தில் அவரை சந்தித்த ஓபிஎஸ் தனது அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவளிக்க கேட்டுக்கொண்டார். அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜி.கே.வாசன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக(புரட்சித்தலைவி அம்மா) அணிக்கு, தமிழ் மாநில காங். கட்சி ஆதரவு அளிக்கும் என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இன்று முதல் தாமக தரப்பினர் மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார்கள் என்றும், நாளை மறுநாள் பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து தான் வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் மதுசூதனன் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.