close
Choose your channels

என் சொத்துக்களை மிரட்டி வாங்கியவர் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதா? கங்கை அமரன் ஆவேசம்

Wednesday, February 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இசையமைப்பாளரும், பாஜக் கட்சியில் பணியாற்றி வருபவருமான கங்கை அமரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து தனது கருத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
'சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்குவதற்கு, உடந்தையாக இருந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதா? என்று ஆவேசமாக கூறினார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளியாக வேண்டும்' என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வார இதழ் ஒன்றில் கங்கை அமரன் பேட்டியளித்திருந்தபோது, கங்கை அமரனுக்கு சொந்தமான 22 ஏக்கர் பரப்பளவுள்ள பண்ணை வீட்டை சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் தன்னிடமிருந்து மிகக்குறைந்த விலைக்கு மிரட்டி எழுதி வாங்கியதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.