close
Choose your channels

அதுக்கு பதிலா நான் தூக்கில் தொங்கிறுவேன்: கஞ்சா கருப்பின் காட்டம் ஏன்?

Monday, July 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேறிய நடிகர் பரணி, நேற்று மீண்டும் தோன்றி தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார். அப்போது தான் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் படம் ஒன்றில் காமெடி வேடத்தில் நடிக்க கஞ்சா கருப்புக்கு சிபாரிசு செய்ததாகவும், இனிமேலும் நான் நடிக்கும் படத்தில் அவருக்கு சான்ஸ் கிடைக்க முயற்சி செய்வேன் என்றும் கூறினார்.
இதுகுறித்து கருத்து கூறிய கஞ்சா கருப்பு, 'எனக்கு வாய்ப்பு பெற்றுத்தர பரணி என்ன அமீரா? பாலாவா? வடிவேலுக்கும் சந்தானத்திற்கும் நான் தான் வாய்ப்பு வாங்கி தந்தேன் என்று கூறினால் அது எந்த அளவுக்கு பொய்யோ, அதே போன்றுதான் எனக்கு அவர் சான்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறுவது.
பரணி சிபாரிசு செய்துதான் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் நிலை வந்தால் நான் தூக்கில் தொங்கிறுவேன். ஒரு சீனியர் நடிகரை இதைவிட யாராலும் கேவலப்படுத்த முடியாது. பரணி யார் என்றே இன்னும் பலருக்கு தெரியாது. ஆனால் கஞ்சா கருப்பை உலகம் முழுவதும் தெரியும் என்று கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.