சசிகலா செய்த சபதம் என்ன? கோகுல இந்திரா விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய சற்று முன் கிளம்பிய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கு அவருடைய சமாதி முன் கையால் ஓங்கி அடித்து சபதம் ஏற்றார்.
அவர் என்ன சபதம் ஏற்றார் என்று வெளிப்படையாக சொல்லவில்லை. இருப்பினும் ஓபிஎஸ் மற்றும் அவருக்கு பின்னணியில் இருக்கும் கட்சிகளை அழிக்க அவர் சபதம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என சசிகலா சபதம் ஏற்றதாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.