close
Choose your channels

சிம்பு ரசிகர்களுக்கு ஒரு உற்சாக செய்தி

Wednesday, July 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீதிமன்ற உத்தரவு காரணமாக வரும் வெள்ளியன்று ரிலீஸாக வேண்டிய சிம்புவின் 'வாலு' திரைப்படம் ரிலீஸாகாததால், கவலையுடன் இருக்கும் சிம்புவின் ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டுவது போல் ஒரு தகவல் தற்போது வெளிவதுள்ளது. 'வாலு' படத்தை அடுத்து சிம்பு நடித்து கொண்டிருந்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இன்னும் சில நாட்களில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஆரம்பமாகவுள்ளது.

'என்னை அறிந்தால்' படத்திற்கு முன்பே இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட இயக்குனர் கவுதம் மேனன், தற்போது முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாகவும், படத்தை எடிட் செய்வதற்காக பிரபல எடிட்டர் அந்தோணியிடம் அவர் ஒப்படைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் எடிட்டிங் பணி முடிந்தவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை பணியை ஆரம்பித்துவிடுவார் என்றும் எனவே இந்த படம் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் சிம்பு நடித்த மற்றொரு படமான 'இது நம்ம ஆளு' படத்தையும் விரைவில் முடித்துவிட்டு அந்த படத்தையும் ரிலீஸ் செய்ய சிம்பு, தீவிர முயற்சியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழ்த்திரையுலகில் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக விளங்கும் டி.ராஜேந்தரின் வாரிசு என்பதை நிரூபிக்கும் வகையில், வாலு படத்தின் தடை, சிம்புவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.