close
Choose your channels

தமிழக ஆளுனரின் சென்னை வருகை திடீர் ரத்தா?

Wednesday, February 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வராக இன்று அல்லது நாளை சசிகலா பொறுப்பேற்கும் வகையில் இன்று காலை தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காகவே ஆளுனரின் மும்பை நிகழ்ச்சிகள் நேற்று ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை சென்னை செல்லும் பயண ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளதால் அவருடைய சென்னை வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கிளப்பிய அரசியல் புயல் காரணமாகவே ஆளுனரின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆளுனரின் அடுத்தகட்ட நடவடிக்கையை நாடே மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.