close
Choose your channels

ஜி.வி.பிரகாஷின் 'நெடுவாசல்' பாடலின் ஆரம்பம் இதுதான்

Saturday, March 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது இளைஞர்களையும், பொதுமக்களையும் எழுச்சி அடைய வைத்தவைகளில் ஒன்று ஜி.வி.பிரகாஷின் 'இது கொம்பு வச்ச சிங்கமடா' என்ற பாடல் என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 'நெடுவாசல்' போராட்டத்திற்கும் ஒரு பாடல் கம்போஸ் செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்திருந்தார். விவசாய நிலங்களை மலடாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த 15 தினங்களுக்கும் மேல் போராடி கொண்டிருக்கும் விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்களின் போராட்ட களத்திற்கு நாளை ஜி.வி.பிரகாஷ் நேரில் சென்று 'நெடுவாசல்' பாடலை ரிலீஸ் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ், அருண்காமராஜ் இணைந்து உருவாக்கிய இந்த பாடலின் ஒருசில வரிகளை ஜி.வி.பிரகாஷ் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 'தியாகம் செய்வோம் வா' என்று ஆரம்பிக்கும் இந்த பாடலின் முதல் ஒருசில வரிகள் இதோ:"
தியாகம்செய்வோம்வா
உறங்காதே தமிழா
இறங்காதே தமிழா
கலங்காதே தமிழா
கசங்காதே தமிழா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.