close
Choose your channels

விவசாயிகளுக்காக 'ஜோக்கர்' இயக்குனருடன் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ்

Thursday, July 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஒவ்வொரு சமூக பிரச்சனையின்போது அதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக ஒரு பாடல் கம்போஸ் செய்து அந்த பாடலை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வது வழக்கம்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையின்போது 'கொம்பு வச்ச சிங்கமடா' என்ற பாடலையும், சமீபத்தில் நடந்த நெடுவாசல் பிரச்சனையின்போது 'தியாகம் செய்வோம்' வா என்ற பாடலையும் கம்போஸ் செய்தார். இந்த பாடல்கள் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் வராததால் ஏற்பட்ட விவசாய பாதிப்புகளை மையமாக வைத்து 'கொளை விளையும் நிலம்' என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. க.ராஜீவ்காந்தி இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலை கம்போஸ் செய்ய, 'ஜோக்கர்' இயக்குனர் ராஜூமுருகன் அதற்கு பாடலை எழுதியுள்ளார். 'அம்மண அம்மண தேசத்துல' என்று தொடங்கும் இந்த பாடலும் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் பாடல் போலவே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.