close
Choose your channels

வைகோவுக்கு துணையாக விரைவில் ப.சிதம்பரம் சிறை செல்வார். ஹெச்.ராஜா

Tuesday, April 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசத்துரோகம் குறித்து சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஹெச்.ராஜா என்பது அனைவரும் அறிந்ததே. அவர் கூறும் கருத்துக்கு முரணாக யாரேனும் கருத்தை தெரிவித்தால் உடனே அவர்களை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டி வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. சமீபத்தில் கூட கேள்வி கேட்ட ஒரு செய்தியாளரை தேசத்துரோகி என்று ஊடகங்களின் முன் கூறி சர்ச்சைகளில் இடம்பெற்றார்
இந்நிலையில் நேற்று தேசத்துரோக வழக்கு ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹெச்.ராஜா, 'ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விரைவில் கைதாகி சிறையில் இருக்கும் வைகோவிற்கு துணையாக அவர் இருப்பார் என்று தனது சமூக வலைத்தளத்தில் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி விமர்சனம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த கருத்துக்கு பதிலளித்த ஒருவர் 'சொல்றிங்களே தவிர செய்ய மாட்றிங்களே' என்று கூற அதற்கு ஹெச்.ராஜா 'விரைவில் செய்வோம்' என்று பதில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.