close
Choose your channels

இன்று பிறந்த நாளை கொண்டாடும் அஜீத்-விஜய் இயக்குனர்

Monday, July 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1999ஆம் ஆண்டு அஜீத் நடித்த 'வாலி' மற்றும் அதற்கு அடுத்த ஆண்டே விஜய் நடித்த 'குஷி' என்ற இரண்டு சுப்பர் ஹிட் படத்துடன் திரையுலக பயணத்தை ஆரம்பித்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமாகி அதன் பின்னர் நடிகர், இசையமைப்பாளர் என அடுத்தடுத்து பல அவதாரங்கள் எடுத்த எஸ்.ஜே.சூர்யா, ஆரம்பத்தில் கே.பாக்யராஜ் மற்றும் வசந்த் போன்ற இயக்குனர்களிடம் உதவியாளராக இருந்தார். 'ஆசை' படத்தில் பணிபுரியும்போது, அஜீத்துடன் நெருக்கமாகி, அதன்பின்னர் அவர் நடித்த 'வாலி' படத்தின் மூலம் இயக்குனரானார். இந்த படத்தின் அபார வெற்றியை பார்த்து ஏ.எம்.ரத்னம், அவருக்கு விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். அதுதான் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'குஷி' திரைப்படம். ஒரு இயக்குனர் இயக்கிய முதல் இரண்டு திரைப்படங்களில் அஜீத், விஜய் நடித்த அபூர்வ அனுபவம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத், விஜய்யை இயக்கிய பின்னர் அவரே ஹீரோவாக அவதாரம் எடுத்து வெளிவந்த படங்கள் நியூ, அன்பே ஆருயிரே. இதன் பின்னர் வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி போன்ற மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்து, இசையமைத்து, இயக்கிய திரைப்படம் 'இசை'. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் நண்பன், பீட்சா, வை ராஜா வை போன்ற பல படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தை எஸ்.ஜே.சூர்யாதான் இயக்கவுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. இந்த செய்தி உண்மையாகி அவர் விரைவில் விஜய்யை இயக்க வாழ்த்து தெரிவித்து மீண்டும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.