close
Choose your channels

கமல் பெயரில் ஒரு வங்கி கொள்ளை படம்

Tuesday, July 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்னர் 'மய்யம்' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். அதன் பின்னர் அதே பெயரில் இணைய இதழ் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதில் பிரபலங்களின் பேட்டிகள், கமலின் கட்டுரைகள் ஆகியவை இடம்பெற்றன. இந்நிலையில் இந்த பெயரை டைட்டிலாக பயன்படுத்தி தற்போது ஒரு திரைப்படம் வெளிவரவுள்ளது.

தமிழகத்தின் பிரபல ஓவியர்களில் ஒருவரான ஸ்ரீதர் தயாரிக்க இருக்கும் படம் ஒன்றுக்கு 'மய்யம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவர் கமல்ஹாசனிடம் அனுமதி பெற்றே இந்த டைட்டிலை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் முழுக்க முழுக்க பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களே பணிபுரிகின்றனர். வங்கியில் கொள்ளையடிக்க ரோபோ சங்கர் தலைமையில் செல்லும் ஒரு கும்பல், எதிர்பாராதவிதமாக வங்கியில் மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றது. விடிவதற்குள் அவர்கள் எப்படி வெளியே வருகின்றனர் என்பதுதான் கதை. ஒரே இரவில் நடைபெறுவதாக உள்ள இந்த படத்தை ஆதித்யா பாஸ்கரன் என்ற கல்லூரி மாணவர் இயக்கியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் கே.ஆர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.திகில் மற்றும் சஸ்பென்ஸ் கலந்துள்ள இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.