close
Choose your channels

ரஜினிக்காக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த இந்து அமைப்பு

Wednesday, May 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்கள் சந்திப்பின்போது அரசியல் குறித்து அவர் பேசிய பேச்சு, தமிழக அரசியலில் பெரும்புயலை கிளப்பிவிட்டது. ரஜினி அரசியலுக்கு வருவதை பெரிய கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு கொடுத்தபோதும், அவர் அரசியலுக்கு வந்தால் பாதிப்பு ஏற்படும் என்று நினைக்கும் கட்சிகளும், தங்களை பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தி கொள்ளும் அரசியல்வாதிகளும் ரஜினியை எதிர்த்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய இந்து சத்திய சேனா என்ற அமைப்பு கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலை காரணத்தையும் மனதில் கொண்டு தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றம் உண்டாக்க வேண்டும் என்ற சமூக ஆர்வத்துடன், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார். இதை சில அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் அவர்களின் கருத்திற்கு முரண்பாடாக பேசிக்கொண்டும் மற்றும் சில அமைப்பை சார்ந்தவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் அவரது உருவபொம்மையை எரித்தும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே ரஜினிகாந்த் அவர்களுக்கும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று எங்கள் அகில இந்திய இந்து சத்திய சேனாவின் அமைப்பின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.