close
Choose your channels

ஹாலிவுட் பட ஸ்டைலில் ஒரு வித்தியாசமான திருட்டு: 3 கிலோ நகைகள் கொள்ளை

Monday, July 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெங்களூரில் உள்ள ஒரு நகைக்கடையில் ஹாலிவுட் பட ஸ்டைலில் 3 கிலோ நகைகளை ஒரு திருடன் கொள்ளையடித்துவிட்டு மாயமாகியுள்ளான். அந்த திருடனை பிடிக்கும் முயற்சியில் பெங்களூர் போலீசார் தீவிரவேட்டையில் உள்ளனர்.

பெங்களூரில் உள்ள காஞ்சன் ஜூவல்லரி என்ற நகைக்கடைக்கு மேலே ஒரு லாட்ஜ் உள்ளது. அந்த லாட்ஜில் சரியாக நகைக்கடைக்கு மேலே உள்ள அறை எண்102ல் முகம்மது ஹூசைன் என்பவர் போலி முகவரியில் அறை எடுத்துள்ளார். பின்னர் நகை வாங்குவது போல் நகைக்கடைக்குள் சென்று ஒருசில முறை நோட்டமிட்டுள்ளார்.

பின்னர் ஒரு சனிக்கிழமை நகைக்கடை பூட்டப்பட்ட பின்னர் மேலே உள்ள அறையில் தங்கியிருந்த முகம்மது ஹூசைன் டிரில்லிங் மிஷின் மூலம் சரியாக ஒரு ஆள் நுழையும் அளவுக்கு ஓட்டையிட்டு, அதன் வழியே கீழே இறங்கி, அந்த நகைக்கடையில் உள்ள சுமார் 3 கிலோ நகைகளை மூட்டைகட்டி அதே வழியில் மேலே ஏறியுள்ளான். பின்னர் யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு அறையை காலி செய்துவிட்டு மாயமாகிவிட்டான்.

மறுநாள் காலை கடை உரிமையாளர் நகைக்கடையை திறந்து பார்த்தபோதுதான் இந்த திருட்டு சம்பவம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இந்த திருட்டுக்கு அந்த லாட்ஜில் உள்ளவர்கள் உடைந்தயா? என்ற ரீதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையின்போது சம்பவம் நடந்த தினத்தில் டிரில்லிங் சத்தம் கேட்டதாக பக்கத்து அறைகளில் தங்கியிருந்தவர்கள் லாட்ஜ் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஹாலிவுட் சினிமா பாணியில் நடந்த இந்த நூதன கொள்ளையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.