close
Choose your channels

நடிகர் சங்கத்தின் கோரிக்கைக்கு கேரள அரசின் முதல்வர் அலுவலகம் பதில்

Tuesday, February 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் சில மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் கேரள திரையுலகை மட்டுமின்றி கோலிவுட் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாவனாவை துன்புறுத்திய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் கேரள முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டதாக நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் தெரிவித்திருந்ததை ஏற்கனவே பார்த்தோம்

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் கடிதத்திற்கு கேரள அரசின் முதல்வர் அலுவலகம் தில் கடிதம் அனுப்பியுள்ளது. உங்களது புகார் பதிவு செய்யப்பட்டதாகவும், இதுகுறித்த சரியான நடவடிக்கை எடுக்க உங்கள் கடிதம் கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு, மாநில காவல்துறை தலைமை அதிகாரி ஆகியோர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த புகாருக்கு உடனடி நடவடிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.