close
Choose your channels

பாவனா தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி கோவையில் பதுங்கலா?

Wednesday, February 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை பாவனா கடந்த வாரம் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து அவரை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியது. இது குறித்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர்கள் என்று கூறப்படும் சுனில் மற்றும் விகேஷ் ஆகியோர் கோவையில் தலைமறைவாக பதுங்கியிருப்பதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவை வந்த கேரள போலீஸ் அங்குள்ள முக்கிய ஹோட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.