close
Choose your channels

மன உளைச்சலால் மேலும் ஒரு பிரபல நடிகை தற்கொலை

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகைகளின் வாழ்க்கை முறையை வெளியில் இருந்து பார்க்கும்போது ஆடம்பரமாக தெரிந்தாலும், பல நடிகைகள் மிகுந்த மன உளைச்சலுடன் தான் இருந்துள்ளார்கள் என்பது அவ்வப்போது வரும் நடிகைகளின் தற்கொலையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ச்சியாக ஏற்படும் மன உளைச்சல் காரணமாக சில்க் ஸ்மிதா உள்பட பல நடிகைகள் தற்கொலை செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை தற்கொலை பட்டியலில் இணைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் பெங்காலி நடிகை பிடாஸ்டா சாஹா என்பவர் அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக அவர் மன வருத்தத்தில் இருந்துள்ளார் என்பது அவரது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்ட பதிவுகளில் இருந்து தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

கொல்கத்தாவில் தனியாக வசித்து வந்த பிடாஸ்டா சாஹாவை வெளியூரில் உள்ள அவரது தாயார் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் உடனே பிடாஸ்டா சாஹா வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடாஸ்டா சாஹாவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.