close
Choose your channels

அஜித்தின் வெறி பிடித்த ரசிகன் நான். அர்த்தநாரி ராம்குமார்

Saturday, April 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர், நடிகையர் உள்பட பல நட்சத்திரங்கள் தங்களை ஒரு பெரிய நடிகரின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வது அவர்களது படங்களை புரமோஷன் செய்யும் ஒரு யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக அஜித் அல்லது விஜய் ரசிகர்களாக தங்களை அறிமுகமாகும் நடிகர், நடிகைகள் கூறிக்கொள்வது அதிகமாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது 'அர்த்தநாரி' என்ற படத்தில் அறிமுகமாகியுள்ள நடிகர் ராம்குமார் தன்னை ஒரு தலயின் உண்மையான விசுவாசி என்றும் வெறி பிடித்த ரசிகன் என்றும் கூறியுள்ளார். மேலும் எந்தவித பின்பலமும் இன்றி தமிழ் சினிமாவில் காலூன்றி நின்ற அஜித்த்தை தன்னுடைய முன்மாதிரியாக பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இயக்குனர் பாலாவிடம் இணை இயக்குனராக இருந்த சுந்தர இளங்கோவன் என்பவர் இயக்கியுள்ள 'அர்த்தநாரி' படத்தில் ராம்குமார், அருந்ததி, நாசர், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். வெண்ணிலா கபடி குழு புகழ் செல்வ கணேஷ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.