close
Choose your channels

சண்டைக்காட்சிகளில் தொடர்ந்து நடிக்க விருப்பம் - த்ரிஷா

Tuesday, November 17, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ரிலீஸான கமல்ஹாசனின் 'தூங்காவனம்' திரைப்படம் பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவில் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் த்ரிஷா நடித்துள்ளதோடு கமல்ஹாசனுடன் சண்டைக்காட்சி ஒன்றிலும் நடித்துள்ளார். இதுகுறித்து த்ரிஷா கூறியதாவது:

இந்த படத்தில் முதன்முதலாக அதுவும் கமல்ஹாசனுடன் சண்டைக்காட்சியில் நடித்த அனுபவங்களை மறக்கவே முடியாது என்றும், முதலில் சண்டைக் காட்சியில் நடிக்க வேண்டும் என்றதும் மிகவும் பயமாக இருந்ததாகவும், ஆனால் கமல் தனக்கு தைரியம் கொடுத்ததால் சிறப்பாக நடிக்க முடிந்ததாகவும் த்ரிஷா கூறியுள்ளார்.

முதன் முதலில் நடித்த சண்டைகாட்சியாக இருந்தாலும் தனக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை என்றும் அந்த அளவுக்கு அந்த சண்டைக் காட்சியில் நடிக்க அவர் டிரைனிங் கொடுத்ததாகவும் கூறிய த்ரிஷா, இந்த படத்தில் நடித்த பிறகு தொடர்ந்து சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தூங்காவனம்' திரைப்படம் த்ரிஷாவின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.