close
Choose your channels

கமல்-ரஜினி கட்சியில் சேர மாட்டேன். பிரபல நடிகை

Friday, September 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார். இன்னும் அதிகாரபூர்வமாக கட்சியின் பெயரை அறிவிக்க வேண்டியது ஒன்று தான் பாக்கி. அதேபோல் 'காலா' படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினியும் தனது அரசியல் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு 'கமல், ரஜினி இருவரும் கட்சி ஆரம்பித்தாலும் அதில் சேர மட்டேன் என்றும், அரசியலே வேண்டாம் என்று விலகினாலும், விலகுவேனே தவிர, இனி வேறு கட்சியில் சேர மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

கமல், ரஜினி அரசியல் வருகை குறித்து அவர் மேலும் கூறியபோது, 'நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே கேரள முதல்–மந்திரியை சந்தித்து இருக்கிறார். தற்போது டெல்லி முதல்–மந்திரியை சந்தித்து இருக்கிறார். ஒரு முதல்–மந்திரியே அவரை தேடிப்போய் சந்தித்து இருப்பதால், கமல்ஹாசனின் 30 ஆண்டுகால தோழி என்ற முறையில் எனக்கு பெருமையாக இருக்கிறது.

கமல்ஹாசன் பிற கட்சியில் சேருவதும், புதிய கட்சி தொடங்குவதும் அவரது விருப்பம். காங்கிரசுக்கு வாருங்கள் என்று அவரை நாங்கள் கூப்பிட மாட்டோம். குஷ்புவை நம்பியோ, கமலை நம்பியோ, ரஜினிகாந்தை நம்பியோ காங்கிரஸ் இல்லை. தனது கொள்கையை நம்பித்தான் இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.