close
Choose your channels

பொய்யான சாதனைகள் நமக்கு தேவையில்லை. எஸ்.எஸ்.ராஜமவுலி

Thursday, August 27, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்த ஒரே தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை செய்துள்ள திரைப்படம் 'பாகுபலி'. இந்நிலையில் இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வெற்றியை குவித்துவிட்டதால் 50 நாட்கள் மற்றும் 100 நாட்கள் என தேவையில்லாமல் திரையரங்குகளில் திரையிட்டு பொய்யான சாதனையை நிகழ்த்த தான் விரும்பவில்லை என இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூறியுள்ளார்.

ஒரு திரைப்படம் 50 நாட்கள், 100 நாட்கள், மற்றும் 200 நாட்கள் என ஓடிய வரலாறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது உண்மைதான். ஆனால் தற்போது ஒரே நேரத்தில் 500 முதல் 1000 திரையரங்குகளில் வெளியாவதால் ஒரு வாரம் ஓடினாலே வெற்றிப்படம் என்றும், மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஓடினால் அது சூப்பர் ஹிட் படம் என்றும் அறிய முடிகிறது.

இந்நிலையில் ஒருசில ரசிகர்கள் இந்த படம் அதிக நாட்கள் ஓடி சாதனை படைக்க வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இந்த படம் ஏற்கனவே நிகழ்த்திய சாதனைகள் போதுமானது. மேலும் மிகைப்படுத்தப்பட்ட சாதனைகளை நான் விரும்பவில்லை. அடுத்து வரும் படங்களுக்கு வழிவிடுவதுதான் நல்லது' என அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.