close
Choose your channels

அஜித்துக்காக மாஸ் கதை ஒன்று வைத்துள்ளேன்: ஷங்கர் உதவியாளர்

Saturday, July 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி, தளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற வெற்றி படத்தை இயக்கியதோடு தற்போது 'மெர்சல்' படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் ஷங்கரின் இன்னொரு உதவி இயக்குனரும், அவர் இயக்கி வரும் '2.0' படத்தில் பணிபுரிந்து வருபவருமான விக்னேஷ்குமார் என்பவர் தல அஜித்தை வைத்து படமெடுப்பதே தனது கனவு என்று கூறியுள்ளார்.

பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த விக்னேஷ்குமார், தான் இயக்கும் முதல் படத்தில் அஜித் நடிக்கவேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும், அவருக்காக மாஸ் கதை ஒன்றை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அஜித் படத்தை இயக்குவது மட்டுமின்றி அவருடன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது தனது இன்னொரு ஆசை என்று கூறியுள்ளார்.மேலும் பிரபல நிறுவனங்களான லைகா, ஏஜிஎஸ், டிரீம் வாரியர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கதை சொல்லியுள்ளதாகவும், மிக விரைவில் தான் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் விக்னேஷ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.