close
Choose your channels

சூர்யா அளவுக்கு என்னை விஜய் காயப்படுத்தவில்லை. கவுதம் மேனன்

Friday, August 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'என்னை அறிந்தால்' படத்தை அடுத்து கவுதம் மேனன் தற்போது 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவரது தயாரிப்பில் உருவான 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' மற்றும் அதன் தெலுங்கு பதிப்பான 'கூரியர்பாய் கல்யாண்' ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இந்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கவுதம் மேனனின் இயக்கத்தில் உருவாக இருந்த விஜய்யின் 'யோஹான் அத்தியாயம் ஒன்று' மற்றும் சூர்யாவின் 'துருவ நட்சத்திரம் ஆகிய இரு படங்கள் டிராப் ஆனது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதிலளித்த கவுதம் மேனன், 'விஜய் நடிப்பதாக இருந்த 'யோஹான் அத்தியாயம் ஒன்று' படத்தின் கதையை விஜய்க்கு நான் படப்பிடிப்பு ஆரம்பிக்க பத்து நாட்கள் இருக்கும்போதுதான் கூறினேன். விஜய் அந்த கதையை கேட்டு அதிருப்தி அடைந்து இந்த கதையை தன்னுடைய ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறி டீசண்டாக எனக்கு புரியும்படி விளக்கிவிட்டு விலகினார். நான் கதை கூறும் விதமும், படமாக்கும் விதமும் வேறு வேறாக இருக்கும் என்பது விஜய்க்கு தெரிந்திருக்க நியாயமில்லை. எனவே அவரது முடிவு எனக்கு வருத்தம் அளித்ததே தவிர காயப்படுத்தவில்லை.

ஆனால் சூர்யாவின் விஷயம் வேறு. சூர்யா நான் பணிசெய்யும் விதத்தை நன்கு அறிந்தவர். என்னுடன் காக்க காக்க', வாரணம் ஆயிரம் ஆகிய இரண்டு படங்களில் பணியாற்றியவர் அதுமட்டுமின்றி அவர் எனக்கு நல்ல நண்பரும்கூட. இவ்வளவுக்கும் நான் 'துருவ நட்சத்திரம்' படத்தின் கதையை அவருக்கு பாதிக்கு மேல் விளக்கி கூறிவிட்டேன். ஆனால் அவர்கூட என்னை புரிந்து கொள்ளாமல் படத்தில் இருந்து திடீரென விலகியது என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது' என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.