close
Choose your channels

'விஜய் 59' படத்தின் டைட்டில்?

Wednesday, August 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் ரிலீஸை அவரது ரசிகர்கள் உள்பட அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இன்று நள்ளிரவு சரியாக 12மணிக்கு இந்த படத்தின் டிரைலர் சமூகவலைத்தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த பரபரப்புக்கு இடையில் விஜய் தனது அடுத்தபடமான 'விஜய் 59' படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.


மீண்டும் போலீஸாக விஜய் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 40% முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை எம்.ஜி.எம் தீம் பார்க்கில் நடைபெற்று வருவதாகவும், இதனை அடுத்து படக்குழுவினர் கோவா செல்ல தயாராகி வருவதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. கோவா படப்பிடிப்பை அடுத்து 'விஜய் 59' படக்குழு சீனா செல்லவுள்ளது என்பது அனைவரும் தெரிந்ததே

மேலும் இந்த படத்திற்கு 'மூன்று முகம்' என்ற டைட்டில் வைக்க அட்லி உள்பட படக்குழுவினர் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், விஜய் இந்த படத்தில் போலீஸ் உள்பட மூன்றுவிதமான கெட்டப்பில் நடிப்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் கருதுவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ்.தாணுதான், ரஜினியின் கபாலி" படத்தை தயாரிப்பதால், அவர் ரஜினியிடம் பேச்சுவார்த்தை நடத்தி எளிதில் 'மூன்று முகம்' டைட்டிலை வாங்கிவிடுவார் என்றே படக்குழுவினர் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், மகேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.